Even Now There Is Patriarchy: இன்னும் ஆணாதிக்கம் உள்ளது: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: இப்பொழுது கூட ஆணாதிக்கம் உள்ளதாக (Even Now There Is Patriarchy) சினிமா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமெக் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பை சென்னை பிரசாத் லேபில் நடத்தினர்.

அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்பொழுது கூட ஆணாதிக்கம் உள்ளது. ஆணாதிக்கம் என்பது கிராமத்து பக்கம் அதிகமாகவே உள்ளது என்பது எனது கருத்தாக இருக்கிறது.

கடவுள் அனைவருக்கும் ஒன்றுதான் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்தக் கடவுளும் என்னுடைய கோயிலுக்கு அவர்கள், இவர்கள் வரக்கூடாது என்ற எந்த ஒரு கடவுளும் சொல்லவில்லை. சில சட்டங்கள்தான் சொல்கிறது. இதனை நாம்தான் உருவாக்கினோம். இவ்வாறு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.