Aiadmk District Secretaries Meeting: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள (Aiadmk District Secretaries Meeting:) அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது. இதன் பின்னர் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து பொதுக்குழு செல்லாது என்று ஓ.பி.எஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிசம்பர் 27) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.