204 bikes confiscated: பைக் ரேஸில் ஈடுபட்ட 204 பைக்குகள் பறிமுதல்

சென்னை: 204 bikes confiscated in Chennai. சென்னை மாநகரில் சாகசத்தில் ஈடுபட்டதாக 204 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சாகசத்திலும், பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் அன்று இரவு பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், நள்ளிரவில் உயர் அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இதுவரை 204 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த அதிரடவி நடவடிக்கை வரும் புத்தாண்டு முடியும் வரை தீவிரமாக நடைபெறும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. மரணத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் என்ற 308 பிரிவு உட்பட குற்றத்திற்கு தகுந்தார் போல் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து பொதுமக்கள் பலரும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் பைக் ரேஸ் பைக் சாகசம் உள்ளிட்டவை குறித்து அளிக்கப்படும் புகார்களையும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறாக சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தெரிவிக்கும் புகார்கள் மூலமாகவும் சென்னை முழுவதும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

பைக் ரேஸ் மற்றும் அதிக வேகமாக இருசக்கர வாகனம் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் 5000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.