இடாநகர்: எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு நம்முடைய (The Security Forces Are Ready To Deal With Any Situation) பாதுகாப்புப் படை தயாராக இருக்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், சியாங் மாவட்டத்தில், எல்லையோர பாதுகாப்பு அமைப்பால் கட்டப்பட்ட சியாம் பாலம் மற்றும் 27 உட்கட்டமைப்புத் திட்டங்களையும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்து பேசியதாவது: எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு நமது பாதுகாப்புப் படை தயாராக இருக்கிறது. இந்தியா எப்போதும் போருக்கு எதிரானது. இந்தியாவை பொறுத்தவரையில் எந்த நாட்டுக்கும் எதிராகப் போரைத் தொடங்கவில்லை.
வடக்கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பா.ஜ.க. சிறப்பாக செயல்படுகிறது. நம்முடைய ஆயுதப்படையுடன் எல்லையோர சாலை அமைப்பு சிறப்பு செயல்படுகிறது. அதே போன்று எந்த ஒரு நாட்டிலிருந்தும் ஒரு அங்குல நிலத்தையும் கைப்பற்றவில்லை. ஆனால் இதே சிலர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசினார்.