Prime Minister Modi : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி

கரோனா சார்ந்த அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை : Prime Minister Modi inquired M. K. Stalin : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி உடல் நலம் குறித்து விசாரித்தார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள‌ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

2 நாள்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு (M.K. Stalin) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சுட்டுரையில், உடல் சோர்வுற்றிருந்ததால் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனவே அனைவரும் முககவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து காவிரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் (Executive Director of Cauvery Hospital Dr. Aravindan) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரோனா சார்ந்த அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.