Pm Modi Inaugurated Luxury River Cruise: உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பல்: பிரதமர் மோடி வைத்தார்

வாரணாசி: உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலை பிரதமர் மோடி இன்று (ஜனவரி 13) காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணம் மேற்கொண்டு அசாம் மாநிலம் திப்ருகர் வழியாக பங்களாதேஷ் சென்றடைய உள்ளது. மொத்தம் மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில் 36 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த திட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அழகிய ஆற்றில் பயணம் செய்வது யாருக்குத்தான் பிடிக்காது.

இந்நிகழ்ச்சியின்போது ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அது மட்டுமின்றி புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு நீர்வழி திட்டங்களும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.