Passengers arrested in Flight: டெல்லி-பாட்னா விமானத்தில் போதையில் தகராறு; பயணிகள் இருவர் கைது

பாட்னா: Two passengers arrested for drunken brawl on IndiGo Delhi-Patna flight. டெல்லியில் இருந்து பாட்னா செல்லும் இண்டிகோ விமானத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாட்னா விமான நிலைய எஸ்ஹோ ராபர்ட் பீட்டர் கூறுகையில், இண்டிகோ விமானத்தின் மேலாளர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எழுத்துப்பூர்வ புகாரை பதிவு செய்ததை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

இண்டிகோ விமானம் எண் 6E-6383 இல் இந்த தகராறு நடைபெற்றது. தரையிறங்குவதற்கு முன், இரண்டு பயணிகள் மதுபானங்களை எடுத்துச் செல்வதாக இண்டிகோ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு (ATC) தகவல் கொடுத்தது.

பயணிகள் மது அருந்தியதற்காக பணியாளர்களால் நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் இந்த சம்பவத்திற்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

ஜனவரி 7 ஆம் தேதி, நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் வணிக வகுப்பில் பயணி ஒருவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததற்காக பெங்களூரைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.