Increased Daily Corona Cases Today: திடீரென்று உயர்ந்த கொரோனா தொற்று

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா (Increased Daily Corona Cases Today) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,722 பேர் ஆக உள்ளது.

இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,47,322 ஆக பதிவாகியது. அதே போன்று நாடு முழுவதும் 2,20,15,14,689 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 51,377 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.