Ilayaraja took oath : மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் பிரபல‌ இசை அமைப்பாளர் இளையராஜா

Image Credit: Twitter.

தில்லி: Ilayaraja took oath as a member of the Rajya Sabha: மாநிலங்களவை உறுப்பினராக பிரபல இசை அமைப்பாளர் இளைஞராஜா இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன உறுப்பினர்களாக குடியரசு தலைவர் நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா (Famous music composer Ilayaraja) மாநிலங்களவை நியமன உறுப்பினராக‌ அறிவிக்கப்பட்டார்.

மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா (Athlete PT Usha), ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினர்களாக நிய‌மிக்கப்பட்டனர்.

கடந்த திங்களன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. அப்போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் இசை அமைப்பாளர் இளையராஜா பதவி ஏற்கவில்லை. அமெரிக்காவிற்கு (America) இளையராஜா சென்றதால் பதவி ஏற்க முடியாமல் போனதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றார் ( Ilayaraja took oath as a member of the Rajya Sabha). அவர் பதவி ஏற்பை தமிழில் கூறி ஏற்றார். இதற்காக அவர் நேற்று தில்லி நேற்று விமானத்தில் வந்தார். அவருக்கு அங்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.