Eknath shinde new CM: மகராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக‌ ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார்

மும்பை: Eknath shinde new CM: மகராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக‌ ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். துணை முதல்வராக‌ பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் பதவி ஏற்றார்.

சிவசேனை கட்சியைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக‌ பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த தேவேந்திர ஃபட்னவீஸ், ஏக்நாத்ஷிண்டே மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அவர்களை ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைத்ததையடுத்து,

வியாழக்கிழமை 7.30 மணியளவில் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பதவி எற்பு விழாவிற்கு தனது குடும்பத்தினருடன் வந்த ஏக்நாத்ஷிண்டே முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். விரைவில் அமைச்சர்களாக சிவசேனை, பாஜகவைச் சேர்ந்தவர்கள் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது

முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜிநாமா செய்த 24 மணி நேரத்திற்குள், ஏக்நாத்ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றுள்ளனர். பதவி ஏற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவில்லை.