Dubai Lottery Jackpot: துபாயில் பணிபுரியும் இந்தியருக்கு அடித்த ரூ.33 கோடி லாட்டரி பரிசு

துபாயில் பணிபுரிந்துவந்த தெலங்கானாவைச் சேர்ந்த அஜய் என்பவருக்கு லாட்டரியில் ரூ.33 கோடி பரிசு விழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் அருகே உள்ள ஜக்தியால் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. கரீம்நகர் பகுதியை சேர்ந்த கணிசமானோர் அரபு நாடுகளில் வேலைக்கு செல்வது வழக்கம். அப்படித்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அஜய் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார்.

அஜய் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவர் சில நாட்களுக்கு முன்பு 30 திர்ஹம்களுக்கு இரு லாட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு ரூ.33 கோடி பரிசாக கிடைத்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியடைந்த அஜய், இதுகுறித்து அவர் தனது சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அஜய்யின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் ரூ.33 கோடி வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அஜய் வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார். நான் துபாய் வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. இங்கே நான் சட்ட எமி கிரேடுகளின் பதிவிறக்க எண்ணை எடுத்துள்ளேன். துபாய் பணம் 15 மில்லியனை எட்டியது. இது இந்திய பணத்தில் 33 கோடி வரை இருக்கும் என்று அஜய் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Ajay from Telangana, who was working in Dubai, won Rs 33 crore in the lottery.