BBC Documentary Case: பிரதமர் மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் வழக்கு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

டெல்லி: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு (BBC Documentary Case) நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட இன கலவரத்துக்கு அப்போது மாநில முதலமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு ஆவண படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய இந்த ஆவணப்படத்திற்கு இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி பல மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.

மேலும் பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக எம்.எல்.சர்மா தரப்பு வலியுறுத்தியது.

இதனை ஏற்று கொண்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி சந்திர சூட் ஒப்புதல் அளித்து. இதனை பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.