A Teenage Girl Was Killed: கேரளாவில் அதிர்ச்சி: ஆன்லைன் பிரியாணி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு

காசர்கோடு: கேரளா மாநிலத்தில் பிரியாணியை ஆன்லைனில் (A Teenage Girl Was Killed) ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா என்ற பகுதியில் ஸ்ரீபார்வதி என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் சாப்பிடுவதற்காக ஓட்டலில் பிரியாணி வாங் சாப்பிட்டார். அதனை தொடர்ந்து திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள் கர்நாடக மாநிலம், மங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் கடந்த டிசம்பர் 31ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறும்போது, இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். பிரியாணி ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.