சென்னை: கோசாலைகளில் கன்றுக்குட்டிகளை பராமரிப்பதற்காக (20 Crore Rupees Will Be Allocated) ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்வு நங்கநல்லூர் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: கோசாலைகளில் கன்றுகளை பராமரிப்பதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களிலும் பசுக்கள் பராமரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.