Diabetes Drug Sitagliptin : நாட்டு மக்களுக்கு நற்செய்தி: மக்கள் மருந்து மையங்களில் 60 ரூபாய்க்கு சர்க்கரை நோய்க்கு மருந்து

Pharmacy Janaushadhi Kendras : நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தில்லி: Diabetes Drug Sitagliptin : நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்து (ஜனவுஷதி) மையம் மற்றும் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட ஆபா சுகாதார அட்டை என ஏராளமான சலுகைகளை மத்திய அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது, ​​டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வழங்கப்படும் சிட்டாக்ளிப்டின் என்ற மருந்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மருந்தை இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அனைத்து மக்கள் மருந்து மையங்களிலும் 10 மாத்திரைகள் அறுபது ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும் (10 tablets are available for just Rs.60) என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரைகள் 50 mg மற்றும் 100 mg அளவுகளில் கிடைக்கும். 50 மில்லி கிராம் மாத்திரையின் விலை அறுபது ரூபாவாக இருக்கும் அதே வேளை 100 மில்லிகிராம் மாத்திரையின் விலை நூறு ரூபாயாக இருக்கும். இதே மாத்திரை சந்தையில் ரூ. 258 க்கு விற்கப்படுகிறது. ஆனால் மக்கள் மருந்து மையத்தில் 10 மாத்திரைகள் கொண்ட ஒரு பேக் பொது மக்களுக்கு ரூ. 60 சதவீத தள்ளுபடியில் சென்றடையும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மக்கள் மருந்து மையங்கள் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.680 கோடி வருவாய் ஈட்டுகின்றன (680 crores in revenue every year). கர்நாடகாவில் 850க்கும் மேற்பட்ட மக்கள் மருந்து மையங்கள் உள்ளன. இது நாட்டின் மொத்த வருவாயில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது. மக்கள் மருந்து மையங்களில் உயர் ரத்த அழுத்தம், வலி ​​தைலம், சர்க்கரை நோய் மாத்திரைகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஆனால், மக்கள் மருந்து மையங்களில் மாத்திரைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு, ஏழை மக்களுக்கு சிரமமாக உள்ளது. இதன உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலனவர்களின் கோரிக்கையாக உள்ளது.