Murder near Tiruvannamalai: திருவண்ணாமலை அருகே கழுத்தை அறுத்து மனைவி கொடூர கொலை

குழந்தை வெள்ளையாக இருந்ததால் பூட்டால் தாக்கி கொடூரமாக கொன்ற தந்தை
கன்னட நடிகர் குத்திக் கொலை

திருவண்ணாமலை: Brutal murder of wife by slitting throat near Thiruvannamalai. போளூரை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்ட, போளூரை அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் (வயது 36). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு சவாரி செல்வது வழக்கம். இவரது மனைவி பச்சையம்மாள் (30). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆன நிலையில், மகள் திவ்யா (11) 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் கதிர்வேலு (9) நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பச்சையம்மாள் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கணவனிடம் சண்டை போட்டுவிட்டு பச்சையம்மாள் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

காலை 10 மணி அளவில் கொரால்பாக்கம் கிராமத்திற்கு சுரேஷ் சென்று கள்ளக்காதல் குறித்து பச்சையம்மாளிடம் கேட்டுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது பச்சையம்மாள் கள்ளக்காதலை கைவிட மறுத்து கணவன் சுரேஷிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி பச்சையம்மாள் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சுரேஷ் போளூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் சரணடைந்தார். உடனடியாக டிஎஸ்பி குமார் மேற்பார்வையில், போலீசார் விரைந்து சென்று பச்சையம்மாளின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.