4 people admitted to hospital : தமிழகத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

அவர்கள் 4 பேருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு போல உடலில் வீக்கம் இருந்ததால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கன்னியாக்குமரி: கன்னியாக்குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேர் குரங்கு அம்மை (Monkey pox symptoms in Tamil Nadu) அறிகுறிகளுடன் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் காணப்பட்டதால் அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 4 பேரும் தனி வார்டுவில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 4 பேருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு போல உடலில் வீக்கம் இருந்ததால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ம. சுப்ரமணியம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4 பேருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரோனாவைத் தொடர்ந்து சர்வதேச அளவில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. தேசிய அளவில் கேரளாவில் (Kerala) முதன் முறையாக குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அங்கு 3 பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தில்லியிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத் நாட்டிலிருந்து தெலுங்கானா வந்த (Telangana) ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குரங்கு அம்மை அறிகுறிகள்:

குரங்கு அம்மை ஒரு வைரஸ் ஜூனோடிக் தொற்று அதாவது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவுகிறது. மனிதர்களிடமும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு குரங்கு அம்மை பரவும். குரங்கு அம்மை கடுமையான நோய் அல்லது அதிக ஆபத்தில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் (Pregnant women, children) மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களை அதிக அளவில் பாதிக்கும்.

காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குறைந்த ஆற்றல் மற்றும் வீங்கிய நிணநீர் முனைகள் ஆகியவை குரங்கு அம்மையின் பொதுவான அறிகுறிகளாகும். இது தொடர்ந்து அல்லது இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். சொறி முகம், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கண்கள், வாய், தொண்டை, இடுப்பு(Eyes, mouth, throat, groin) மற்றும் பிறப்புறுப்பு மற்றும் உடலின் குதப் பகுதிகளில் காணப்படும். புண்களின் எண்ணிக்கை ஒன்று முதல் பல ஆயிரம் வரை இருக்கலாம். காயங்கள் தட்டையாகத் தொடங்குகின்றன.

பின்னர் அவை மேலோடு, காய்ந்து விழும் முன் திரவத்தால் நிரப்பப்படுகின்றன, அதன் கீழ் புதிய தோல் அடுக்காக‌ உருவாகிறது. காயங்கள் அனைத்தும் மேலோட்டமாகி, சிரங்குகள் உதிர்ந்து, தோலின் கீழ் ஒரு புதிய அடுக்கு உருவாகும் வரை மக்கள் தொற்றுடன் இருப்பார்கள். குரங்கு அம்மை பாதிப்பு இருப்பவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர் (Health care provider)அல்லது சம்பந்தப்பட்ட‌ மருத்துவர்களிடம் சென்று ஆலோசனை, சிகிச்சை பெறுவது அவசியம்.