மும்பை: Vidya Balan support of actor Ranveer Singh photoshoot: ஆலியா பட்டைத் தொடர்ந்து, நடிகர் ரன்வீர் சிங்கின் சர்ச்சைக்குரிய நிர்வாண போட்டோஷூட் தொடர்பாக வித்யா பாலன் தற்போது அவருக்கு ஆதரவாக வந்துள்ளார்.
நடிகர் ரன்வீர் சிங்கின் அச்சு இதழுக்கான போட்டோஷூட் படங்கள் ஜூலை 21ம் தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டன. படங்களில், ரன்வீர் ஆடை அணியாமல் காணப்படுகிறார். ஒரு படத்தில், அவர் பர்ட் ரெனால்டின் புகழ்பெற்ற புகைப்படத்தை மறுஉருவாக்கம் செய்யும் கம்பளத்தின் மீது நிர்வாணமாக படுத்துக் கொண்டுள்ளார்.
இந்த நிர்வாண படங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே சர்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற குப்ரா சைட்டின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை வித்யா பாலன், ரன்வீரின் நிர்வாண படங்கள் உங்களுக்கு பிடிக்குமா, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு வித்யா ஒரு பெருங்களிப்புடைய பதிலை அளித்தார். “அதில் என்ன பிரச்சனை? ஒரு மனிதன் இப்படிச் செய்வது இதுவே முதல் முறை. ஹுமே பீ ஆன்கெய்ன் சேக்னே திஜியே (நாமும் நம் கண்களுக்கு விருந்து செய்வோம்)” என்றார்.
கடந்த 26ம் தேதி, செம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ரன்வீர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. நடிகர் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அலுவலக அதிகாரியின் புகாரைப் பெற்ற பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம் 292 (ஆபாசமான புத்தகங்கள் விற்பனை போன்றவை), 293 (இளைஞர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்தல்), 509 (ஒருவரின் அடக்கத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் மும்பை காவல்துறை ரன்வீர் சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
ரன்வீருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது குறித்து வித்யாவிடம் கேட்டபோது, ”ஒருவேளை அவர்களுக்கு (எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தவர்களுக்கு) அதிக வேலை இல்லை, எனவே அவர்கள் இந்த விஷயங்களில் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பிறகு காகிதத்தை மூடி அல்லது எறிந்துவிட்டு, நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். ஏன் எஃப்ஐஆர் போட வேண்டும்?”
இதேபோல், கடந்த புதன்கிழமை, மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தில் ரன்வீருக்கு எதிராக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. புகார்தாரரும் வழக்கறிஞருமான ஆஷிஷ் ராய் கூறுகையில், ரன்வீரின் படங்கள் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளின் கண்ணியத்திற்கு எதிரானவை. அவர் தனது நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றார். புகாரின் மூலம் மகளிர் ஆணையத்திடம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.