TNUSRB Jobs: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB): தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (Constables, Gr.II )(மாவட்ட / மாநகர ஆயுதப்படை) ஆண்கள் 1526, பெண்கள் 654 காலிபணியிடங்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 1091 காலிபணியிடங்கள், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் (Jail Warders) ஆண்கள் 153, பெண்கள் 08 காலிபணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பாளர் (Firemen) 120 காலிபணியிடங்கள் மொத்தம் 3552 காலிபணியிடங்களில் 5% முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அப்பணியிடங்களை நிரப்பிட 07.07.2019-க்கு பின்னர் விடுவிக்கப்பட்ட 47 வயது மேற்டாதவராக (அதாவது 01.07.1975-லிருந்து 01.07.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்) முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எனவே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 01.07.2022 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் (Ex Service Man) மற்றும் 01.07.2022-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 15.08.2022-க்குள் விண்ண ப்பித்து பயனடைய வேண்டுமாறும், விண்ணப்பித் முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியினையும், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.