தர்மபுரி: Private Sector Employment Camp coming up on 12th in Dharmapuri: தர்மபுரியில் வரும் 12ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடை பெறுகிறது.
எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவின நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் அவர்களது பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெடிங் எக்ஸ்க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர். டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் மாளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெறவுdra தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலிக்கப்படுவர்கள்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் வரும் 13ம் தேதி நேஷ்னல் லோக் அதாலத்
தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி / மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு ) முனுசாமி தெரிவித்துள்ளதாவது:
மாவட்ட அளவில் நீதிமன்றகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதளின்படியும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெற உள்ளதை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 08ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அந்தந்த நீதிமன்றகளிலேயே மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் (நேஷ்னல் லோக் அதாலத்) நடைபெறும். இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு . காசோலை மோசடி வழக்கு. வங்கி வாராக்கடன் வழக்கு தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினம் தீர்வு காணப்படவுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றகளில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கோவிட் 19 பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.