Youth killed : கழுத்தை நெறித்து இளைஞர் கொலை: பெற்றோரிடம் போலீசார் விசாரணை

மதுரை: Police interrogates parents : கழுத்தை நெறித்து இளைஞரைக் கொலை செய்த‌ பெற்றோர், சகோதரனிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு மதுரை சொக்கலிங்க நகர் (Madurai Chokkalinga Nagar) பகுதியை சேர்ந்த நாகராஜன். இவரது மனைவி குருவம்மாள். இவர்கள் இருவரும் தங்களின் வீட்டின் அருகே வடை போட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், இளைய மகன் 25 வயது மாரி செல்வம் (25 year old Mari Selvam)தொழில் கல்வி படிப்பை இடை நிறுத்திவிட்டதோடு, பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார்.மேலும் இவர் மது அருந்தும் பழக்கத்திற்கும் ஆளாகி உள்ளார்.

இதனால் மாரிச்செல்வம் அவ்வப்போது மது அருந்துவதற்கு பணம் கேட்டு பெற்றோரிடம் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் மாரி செல்வம் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்தப்பிற்கு பெற்றோர்களிடம் பணம் கேட்டு (Asking for money) தகராறில் ஈடுபட்டுதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் மாரி செல்வத்தின் கழுத்தில் ஸ்கிப்பிங் விளையாட பயன்படுத்தும் கயிற்றைக் கொண்டு, மாரிசெல்வத்தன் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் இது குறித்து மதுரை எஸ். எஸ். காலனி போலீசாருக்கு (Madurai SS Colony Police)தகவல் தெரிவித்துள்ளனர். தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், மாரி செல்வத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாரி செல்வத்தின் பெற்றோர்களான‌ நாகராஜ், குருவம்மாள் மற்றும் அவர்களது மூத்த மகன் ஆகியோரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, மாரிசெல்வம் கொலை தொடர்பாக‌ தீவிரமாக‌ விசாரணை (Investigating)நடத்தி வருகின்றனர்.