Man arrested for rape : பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு சிறுமியை கர்ப்பமாக்கிய 50 வயது நபர் கைது

Mumbai : தனது வீட்டில் இருந்த சில பொருட்களை அந்த சிறுமி திருடியதாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார்

மகாராஷ்டிரா: Man arrested for rape : பெண்களைப் பாதுகாக்க நாட்டில் எவ்வளவு வலுவான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும், நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்கிறது. கடுமையான சட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டாலும் சில காமூகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரியவில்லை. இதற்கு ஆதாரமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் 50 வயது நபர் ஒருவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பக்கத்து வீட்டில் வசித்த‌ அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் விளைவாக சிறுமி கர்ப்பமானார். அதன் பிறகு இது சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மே 24-ஆம் தேதிய‌ன்று, சிறுமியின் பக்கத்து வீட்டிற்கு குடிபுகுந்த‌ 50 வயதுடைய நபர், வீட்டுப் பொருட்களை மாற்றுவதற்கு சிறுமியிடம் உதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொருள்களை மாற்றுவதற்கு சிறுமி, அவருக்கு உதவியுள்ளார். இதன் பிறகு வீட்டில் இருந்த சில பொருட்களை அந்த சிறுமி திருடியதாக அந்த நபர் குற்றம் சாட்டியுள்ளார். மே 24 மற்றும் 25 ஆம் தேதிகளின் நள்ளிரவில் அந்த சிறுமி, அவரின் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு, சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் நடந்த இந்த சம்பவத்தை சிறுமி யாரிடமும் கூறவில்லை. கடந்த வாரம் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரித்தபோது, ​​பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த நபர்தான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட‌தாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார், அந்த நபரைக் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.