Cruelty by locking the daughter: பெற்ற மகளையே வீட்டுக்குள் பூட்டிவைத்து கொடூரம்: தந்தை, மகன் கைது

சென்னை: Cruelty by locking the daughter: சென்னையில் மகளை வீட்டுக்குள் பூட்டிவைத்து கொடூரமாக தாக்கியதாக தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மாதவரம் பகுதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பழனி. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான (Rtd Railway Staff) இவருக்கு, ஹேமந்த் குமார் என்ற மகனும், அனுராதா என்ற மகளும் உள்ளனர். அனுராதா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது அயனாவரத்தில் உள்ள செல்போன் உதிரிபாகக் கடையில் (Cell Phone Shop) வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை மற்றும் தம்பியுடன் அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அனுராதாவை ஒரு அறையில் வைத்து இருவரும் அடித்து துன்புறுத்தி (Harassment) வந்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் அறையை பூட்டிவிட்டு (Room Locked) சென்ற நிலையில், அனுராதா அங்கிருந்து தப்பித்து, உடல் காயங்களுடன் சிகிச்சைக்கான மருத்துவமனைக்கு (Hospital) சென்றுள்ளார். அங்கு காயங்களை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மாதவரம் போலீசாருக்கு (Madhavaram Police) தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தந்தை பழனி மற்றும் தம்பி ஹேமந்த்குமார் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அனுராதாவை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் (Court) ஆஜர்படுத்தி சிறையில் (Jaill) அடைத்தனர்.