Friends committed suicide: மனைவி திட்டியதால் மதுவில் விஷம் கலந்து குடித்த கணவன்; நண்பரும் உயிரிழந்த சோகம்

திருவள்ளூர்: Two friends committed suicide by drinking poison. சோழவரம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து நண்பர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த சோழிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன் வயது (34)சிவக்குமார் வயது (38) நண்பர்களான இவர்கள் இருவரும் கட்டிட தொழில் செய்து வந்தனர். காலி மைதானத்தில் இவர்கள் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த கிராம மக்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவல்துறையினர் பார்த்தபோது சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். மயங்கிய நிலையில் கிடந்த ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக செங்குன்றம் அருகே பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இரண்டு சடலங்களையும் கைப்பற்றிய போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். ஆனந்தன் என்பவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனதால் அவருடைய மனைவி திட்டியதாகவும் அதனால் ஆனந்தன் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளது தெரிய வந்தது.

ஆனந்தன் மதுவில் விஷம் கலந்தது தெரியாமல் சிவக்குமார் குடித்து இறந்தாரா அல்லது நண்பனுடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்கள் இருவர் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.