Forced Girlfriend to marry: காதலியை மணமுடிக்க துடித்த காதலனுக்கு நேர்ந்த கதி

வாணியம்பாடி: Forced Girlfriend to marry: வாணியம்பாடி அருகே காதலியை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலனை சரமாரி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், திருமாஞ்சோலையை சேர்ந்த சக்திவேல் என்பவரும், ஏலகிரி மலை (Yelagiri Hills) பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து (Love) வந்துள்ளனர். இதனையடுத்து காதலன் சக்திவேல் தன்னுடைய காதலியிடம் திருமணம் (Marriage) செய்துகொள்ள தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் சாந்தகுமார், பூவரசன், ஹரி உள்ளிட்ட 5 பேர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருமாஞ்சோலை (Thirumancholai) பகுதியில் உள்ள சக்திவேல் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து இவர்களுக்கு இடையே பயங்கர மோதல் (clash) ஏற்பட்டது. இதில் சக்திவேல் பலத்த காயமடைந்தார்.

அப்போது அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 5 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். அதில் இருவர் தப்பி ஓட்டம் பிடித்தனர். பின்னர் மூவரையும் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் (Vaniyambadi Police Station) ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் தாக்கியதில் பூவரசன், ஹரி, சாந்தகுமார் ஆகியோரை படுகாயங்களுடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் (Vaniyambadi Govt Hospital) சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.