Father kills his daughters : மகள்களை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் போலீஸில் சரண்

Father kills his daughters auto driver who killed his daughters surrendered to police

Father kills his daughters : தனது குழந்தைகளை தந்தை உள்ளிட்ட பெற்றோர்கள் பாராட்டி, சீராட்டி வளர்ப்பது வாடிக்கை. ஆனால் தந்தையே தனது 2 மகள்களை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் போலீஸில் சரணடைந்துள்ளார்.

கலபுர்கி: கலபுர்கி போவிஹள்ளியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் லட்சுமிகாந்தா. இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இவரது மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். இதனையடுத்து 4 குழந்தைகளையும் தனது பெற்றோரது வீட்டில் விட்டிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் தனது குழந்தைகளை ஆட்டோவில் தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை தனது 2 மகள்கள் 11 வயது சோனி, 9 வயது மயூரி ஆகியோரை கழுத்தை நெரித்து கொன்ற லட்சுமிகாந்தா, அவர்களிடன் சடலங்களுடன் ஆட்டோவில் சுற்றி திரிந்துள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் தனது மற்ற குழந்தைகள் நவீத், ஸ்ரேயா ஆகியோருடன் மகாத்மா பசவேஸ்வரா காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். தந்தையே தனது குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிந்து போலீஸார் லட்சுமிகாந்தாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

must Read : Accident: சேலம் அருகே பைக் மீது லாரி மோதல் – தந்தை, மகன் உயிரிழப்பு

Must Read : Meena husband Vidyasagar: தென்னிந்திய நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

Father kills his daughters auto driver who killed his daughters surrendered to police