Murder for a kiss : முத்தத்திற்காக நடந்த‌ ஒரு வித்தியாசமான கொலை

murder for a kiss in palakkad

Murder for a kiss : முத்தத்தால் சொர்க்கத்தைப் பார்க்கலாம். ஆனால் முத்தத்திற்காக கணவர் ஒருவர் தனது மனைவிக்கு நரக வாசலைக் காட்டியுள்ளார்.

பாலக்காடு: இது ஒரு முத்தத்திற்காக நடந்த கொலை. பெங்களூரைச் சேர்ந்த அவினாஷ், வேலைக்காக கேரளாவின் பாலக்காடு பகுதிக்கு சென்று, அங்கு மனைவி மற்றும் அழகான குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

செவ்வாய்கிழமை இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. அவினாஷ் தனது இரண்டரை வயது குழந்தைக்கு முத்தம் கொடுக்க சென்றுள்ளார். அவரது மனைவி பிரியங்கா பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட சென்ற அவினாஷை தடுத்துள்ளார்.

இதனால் இருவரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவினாஷ் மனைவி பிரியங்கா மீது கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். பிரியங்காவின் அலறலைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர், பலத்த காயமடைந்த பிரியங்காவை பாலக்காடு பெரிந்தல்மன்னா அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் பிரியங்கா உயிரிழந்துள்ளார். இதனால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவினாஷிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தாய் இறந்து, தந்தை சிறை சென்றதால் அவர்களது இரண்டரை வயது குழந்தை அனாதையாகி உள்ளது. அந்த‌ குழந்தையை பிரியங்காவின் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.

must read : Meena husband Vidyasagar: தென்னிந்திய நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

must read : Father kills his daughters : மகள்களை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் போலீஸில் சரண்

murder for a kiss in palakkad