Drunken husband died drama: குடிபோதையில் கணவர் இறந்ததாக நாடகம்.. மனைவி கைது

திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு
திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

சென்னை: Chennai woman fakes husband’s death, arrested. சென்னையில் குடிபோதையில் தனது கணவர் இறந்ததாக போலியாக நாடகமாடிய பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சாலிகிராமம் மதியழகன் நகரில் வசிக்கும் வேலுமுருகன் (40) என்பவரை அவரது மனைவி வினோதினி (37) நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் குடிபோதையில் கீழே விழுந்து காயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

வேல்முருகனை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விருகம்பாக்கம் போலீசார், வேல்முருகனின் வயிற்றில் ரத்த காயம் இருப்பதை கண்டு, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையில், வினோதினி தான் கணவரை கத்தியால் குத்தியதாகவும், கணவர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது போலவும் போலீசில் கூறியது தெரியவந்தது. இதனையடுத்து வினோதினியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான வேல்முருகன், ஜனவரி 9-ஆம் தேதி (திங்கட்கிழமை) குடிபோதையில், உடைகள் மற்றும் உடலில் சேறு பூசிய நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவருடைய மனைவி அவனை குளிக்க உதவி செய்து அவனை படுக்க வைத்தாள். சிறிது நேரத்தில் வேல்முருகன் படுக்கையில் சிறுநீர் கழித்ததால் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அந்த நபரின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “வேல்முருகன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை, ஆனால் வீட்டிலேயே சில அடிப்படை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மதியம் வேல்முருகன் ரத்தப்போக்கு காரணமாக மயங்கி விழுந்ததால், அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்”என்று அவர் கூறினார்.