3 members suicide :உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை

உத்திரப்பிரதேசம்: 3 members committed suicide :உத்திரபிரதேச‌ மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
உத்திரபிரதேச‌ மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சோனு, இவரது மனைவி கீதா மற்றும் எட்டு வயது மகள் ஸ்ரீஷ்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோனு, கீதா தம்பதியரின் 10 வயது மகன் ஷியாம் உயிருடன் உள்ளார்.

இது குறித்து அவரது குடிப்பதினர் கூறியதாவது: சோனு, கீதாவை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் தனியாக வசித்து வந்தனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு சோனு ஒரு விபத்தில் சிக்கினார். விபத்திற்கு பிறகு தனது தந்தையின் தொழில் பார்த்து வந்தார். கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சோனு, வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் மேல் தளத்தில் தனது பேரனுடன் தூங்கிக் கொண்டிருந்த சோனுவின் தாயார் தூங்கிக் கொண்டிருந்தாராம். நள்ளிரவில் அவரது பேரன் கீழே இறங்கிக் சென்றதை அடுத்து, அவனைத் தொடர்ந்து, சோனுவின் தாயாரும் சென்றுள்ளார். கீழே இறங்கி பார்த்தப்போது, சோனு, கீதா அவர்களது மகள் ஸ்ரீஷ்டி ஆகிய மூவரும் உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தனராம்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸார், 3 பேரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.