Actress Jacqueline Fernandez : நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜாமீன்

புது டெல்லி : Actress Jacqueline Fernandez granted bail : பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தொழிலதிபரை மிரட்டி ரூ. 200 கோடி பறித்த வழக்கில் மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடி தொடர் பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகர் ரூ. 10 கோடி அளவில் பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தது தெரிய வந்தது.

அந்த வகையில், இந்த வழக்கில் நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த அமலாக்கத் துறை (Enforcement Department) அவருக்கு பலமுறை அழைப்பாணை அனுப்பி நடத்திய விசாரணையில் , சுகேஷிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பில் பரிசுப் பொருள்களை அவர் பெற்றது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல்செய்த அமலாக்கத் துறை, அண்மையில் துணை குற்றப்பத்திரிகை ஒன்றையும் தாக்கல் செய்தது. அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரும் முதல் முறையாக குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த துணைக் குற்றப்பத்திரிகை அடிப்படையில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு ஜாக்குலினுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம்( Delhi Special Court) கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி உத்தரவிட்டது. அதனடிப்படையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அவர், இந்த வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். சிறப்பு இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி ஷைலேந்திரமாலிக், ரூ.50,000 சொந்த பிணை மற்றும் அதே தொகைக்கு மற்றொரு உத்தரவாதத்துடன் ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.