Vijay fans offered prayers at Sabarimala: வாரிசு படம் வெற்றிபெற சபரிமலையில் பிரார்தனை செய்த விஜய் ரசிகர்கள்

சென்னை: Actor Vijay’s ‘Warisu’ film fans prayed with banners at Sabarimala. நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படம் வெற்றிபெற சபரிமலையில் ரசிகர்கள் பேனருடன் பிரார்த்தனை செய்தனர்.

நடிகர் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு தமிழ் படங்களும் வரும் ஜனவரி மாதம், பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் மோதும் என்று சில காலமாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.

ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம், தீபாவளியையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு காலம் தாழ்த்தி வந்ததால், கடைசியாக படத்தை பொங்கலையொட்டி களத்தில் இறக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, ஜனவரி 12ம் தேதி அதாவது வியாழன் அன்று வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் வெளியாகும் வாரிசு, அதற்கு அடுத்த நாள் வெளியாகிறது. இருப்பினும் இந்த வெளியிடப்பட்ட தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். டோலிவுட்டின் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தெலுங்குப் பேனரால் தயாரிக்கப்பட்டு, எஸ்.எஸ்.தமன் இசையமைக்க வாரிசு ஒரு மல்டி ஸ்டாரர் ஃபேமிலி என்டர்டெய்னர்.

அஜித் மற்றும் விஜய் படங்களுக்கு இடையே நேரடி போட்டி நிலவ உள்ளது. தயாரிப்புக்குழு படத்தை வெளியீடு செய்தாலும், முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள்தான் கூடுதல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இரு உச்ச நடிகர்களுக்கும் சம அளவு தியேட்டர்கள் பகிர்ந்து அளிக்கப்படுமா என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூகவலைதளங்களில், அஜித்தின் துணி படமும், விஜயின் வாரிசு படமும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது உறுதியான தகவல்தான். ஜனவரி 12 ம் தேதியன்று துணிவும், ஜனவரி 13ம் தேதியன்று வாரிசும் வெளியாகும். இரு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் கிடைக்கும். அப்படி பாதி பாதி தியேட்டர்களை ஒதுக்குவதே திட்டமாகவும் உள்ளது. இது ஆரோக்கியமான போட்டிதான் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுவதாகவும் இது சினிமாவுக்கும் ஆரோக்கியம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையைச் சேர்ந்த ரசிகர்கள் சுபாஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சபரிமலை கோவிலுக்கு சென்று அங்கே பதினெட்டாம்படி அருகில் ‘வாரிசு’ திரைப்பபடத்தின் பேனரை உயர்த்தி பிடித்தப்படி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ‘வாரிசு’ படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.