Actor Rajinikanth’s New movie : நாளை நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தின் பூஜை

சென்னை: Tomorrow is actor Rajinikanth’s new movie pooja :நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (CB Chakravarthy), ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்து வெளியான நகைச்சுவை நிறைந்த திரைப்படமான டான், ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடித்து 168 திரைப்படங்கள் வெளியாகி உள்ள்ன. 169 வது திரைப்படமாக ஜெயிலர் வெளியாக உள்ளது (Jailer is the 169th movie to release). இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப் படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன‌. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, வடிவேலு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ரசிகர்கள் அதிக அளவில் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கும் இப்படத்தின் பூஜை (The film is eagerly awaited by the fans) சனிக்கிழமை (நவ.5) சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் புதிய இயக்குநர்களின் இயக்கத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடத்த விக்ரம் பெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிபி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பெறும் என்று ஆர்வத்தை தூண்டி உள்ளது.