Director Manirathnam : பிரபல இயக்குநர் மணிரத்னம் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Director Manirathnam admitted to hospital : கரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் மணிரத்னம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: Director Manirathnam :கரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மணிரத்னம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிரத்னத்தின் உடல்நிலை குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

ஜூலை 15-ஆம் தேதி காலமான நடிகரும், தயாரிப்பாளருமான பிரதாப் போத்தனின் இறுதிச் சடங்கில் மணிரத்னம் கலந்து கொண்டார். இதற்கு முன், ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற தனது அடுத்த படமான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் மணிரத்னம் கலந்து கொண்டார்.

கல்கியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் நாடோடி மன்னனுக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (MGR) இயக்கவிருந்த படம். நான் இந்த படத்தை தொடங்க‌ மூன்று முறை வேலை செய்ய முயற்சித்தேன். 1980, 2000 மற்றும் 2010ல் மூன்று முறை முயற்சித்தேன். ஆனால் அது பலிக்கவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் (Ponniyin Selvan novel) நன்றாக இருந்ததால் இந்தப் படத்தை தொடர்ந்து முயற்சி செய்து எடுத்ததாக அவர் கூறினார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராய் (Aishwarya Rai), த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் (AR Rahman) இசையமைத்துள்ளார். ரவிவர்மனின் ஒளிப்பதிவாளர் திறமையால் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜூலை 8-ஆம் தேதி வெளியான இப்படத்தின் டீசரை மோகன்லால், அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), சூர்யா, ரக்ஷித் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.