Dil Raju Ready To Talk With Udhayanidhi Stalin: உதயநிதி கிட்டே நானே பேசுறேன்: வாரிசுக்காக தில்லாக கிளம்பும் தில் ராஜு

சென்னை: தமிழகத்தில் நடிகர் விஜய் தான் மிகப்பெரிய ஸ்டார் (Dil Raju Ready To Talk With Udhayanidhi Stalin) எனவும் அவரின் வாரிசு படத்துக்கு சரி சமமாக தியேட்டர் ஒதுக்கக்கூடாது எனவும், கூடுதலான தியேட்டர்கள் தேவை என்று வாரிசு படத்தின் தில் ராஜு அதிரடியாக பேசியிருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தில் ராஜீ தயாரிப்பில் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் வெளியாக இருப்பதும் அதனை உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனால் விஜய் படத்திற்கு எதிர்பார்த்த தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே வாரிசு படத்துக்கு கூடுதலான தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜீ பேசியிருப்பது கோடம்பாக்கம் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. மேலும், தமிழகத்தை பொறுத்தமட்டில் நடிகர் விஜய்தான் மிகப்பெரிய நடிகர் எனவும், இது வியாபாரம் எனவே விஜய்யின் வாரிசு படத்துக்கு கூடுதலான தியேட்டர்களை ஒதுக்க வேண்டும். அதுதான் வியாபார வசூலுக்கும் சரியாக அமையும் என்று தில் ராஜீ பேசியுள்ளார். இவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.

அதாவது நடிகர் அஜித், ரஜினிகாந்த் இவர்கள் எல்லாத்தையும் தாண்டி வெறும் விஜய் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் போன்று பேசியுள்ளார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.

மேலும், வாரிசு படத்தை தயாரித்துள்ள தில் ராஜீ தமிழகம், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். ஆனால் தமிழகத்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு சரிசமமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்ற நிலைப்பாட்டுக்கு அவரின் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே துணிவு படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில இடங்களில் வாரிசு படத்தையும் வெளியிடப்போவதாக பேச்சுகள் அடிப்படுகிறது.

இந்நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜீ தானே சென்னைக்கு புறப்பட்டு சென்று இது பற்றி உதயநிதி ஸ்டாலினிடம் பேசப் போவதாக அதிரடியாக கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின் தி.மு.க., அரசின் 35 வது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் மட்டுமே அனைத்து படங்களையும் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சரும் ஆகியுள்ளார் இதனால் யார் படத்திற்கு முன்னுரிமை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களிடையேயும் எழுந்துள்ளது.

முந்தைய செய்தியை படிக்க:kashi Tamil Sangam: காசி தமிழ் சங்கமம் விழா இன்றுடன் நிறைவு: யார், யார் பங்கேற்கிறார்கள்?

முந்தைய செய்தியை படிக்க:Bus Van Collision In Kumarapalayam: செங்கத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் குமாரபாளையத்தில் பயங்கர விபத்து