Ayurveda is the cure for actress Samantha: நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வதே சிகிச்சை.. உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: According to reports, Ayurvedic treatment is being given to actress Samantha, who is resting at home due to ill health. உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்துவரும் நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது கணவரான நாக சைத்தானியாவை பிரிந்தது முதல் இவருக்கு திரையுலகில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. இதனைத்தொடர்ந்து இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போது வீட்டில் ஓய்வில் உள்ளார்.

மேலும் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாமல் நடிகை சமந்தா இருந்து வந்தார். இதனையடுத்து இவரது டுவிட்டர் பதிவில், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிக்சைப் பெற்று வரும் போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுப்பட்டார். அப்போதே சமந்தாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் வைரலானது.

பின்னர் ஒருசில நேர்காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே கடினமாக காலத்தை கடந்து வந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தகவலின் படி, வீட்டில் ஓய்வில் உள்ள சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறையால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

According to reports, Ayurvedic treatment is being given to actress Samantha, who is resting at home due to ill health.