Actress Soumya Tandon raises funds for co-star: உயிரிழந்த சக நடிகருக்காக நிதி திரட்டும் நடிகை சவுமியா டாண்டன்

மும்பை: Actress Soumya Tandon raises funds for co-star: மறைந்த சக நடிகர் தீபேஷ் பானின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் கடனை திருப்பிச் செலுத்த நடிகை சவுமியா டாண்டன் பணம் திரட்டினார்.

மகாராஷ்டிராவின் மும்பை நகரில் தாஹிசர் பகுதியில் தொலைக்காட்சி நடிகர் தீபேஷ் பான் வசித்து வந்தார். இவருக்கு 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். மனைவி மற்றும் 18 மாத ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார்.

இவர் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, சற்று நேரத்தில் தீபேஷ் பன் உயிரிழந்து விட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன்பு, தீபேஷ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார் என கூறப்படுகிறது. தொலைக்காட்சியில் காமெடி கா கிங் கான், காமெடி கிளப், பூட்வாலா, எப்.ஐ.ஆர்., சேம்ப் மற்றும் சன் யார் சில் மார் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி தொடரான பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடரிலும் மால்கன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். அவரது மறைவை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து நடிகரின் உயிரிழப்பால் அவரது குடும்பத்தார் வங்கியில் வீட்டுக் கடனாக வாங்கிய ரூ.50 லட்சத்தை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் நடிகை சவுமியா டாண்டன், தனது மறைந்த சக நடிகர் தீபேஷ் பானின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ளார்.

தீபேஷ் பானின் குடும்பம் ரூ.50 லட்சம் மதிப்பிலான வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு சௌமியா இன்ஸ்டாகிராமில் ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், மறைந்த நடிகரின் குடும்பத்திற்கு நன்கொடை அளித்து உதவுமாறு தனது ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் கேட்டுக்கொண்டார்.

வீடியோவில் நடிகை சௌமியா, ” தீபேஷ் பன் எங்களுடன் இல்லை, ஆனால் அவரது நினைவுகள் இன்னும் எங்களிடம் உள்ளன. அவர் பேசக்கூடிய நபர் மற்றும் அவர் தனது குடும்பத்திற்காக வீட்டுக் கடன் வாங்கிய பிறகு வாங்கிய வீட்டைப் பற்றி அடிக்கடி பேசுவார். . அவருக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார் ஆனால் பிறகு அவர் எங்களை விட்டுப் பிரிந்தார். இப்போது அவருடைய வீட்டை அவருடைய மகனுக்குத் திருப்பிக் கொடுத்து விடலாம்.” என ஹிந்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் ஒரு நிதியை உருவாக்கியுள்ளேன், அதில் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டாலும் தீபேஷ் மனைவிக்கு வழங்கப்படும், அதன் மூலம் அவர் வீட்டுக் கடனை செலுத்தலாம். எனவே, தீபேஷின் கனவை நனவாக்க பங்களிக்கவும். .இது நான் @Deepesh_b2 உடன் பணிபுரிந்த இனிமையான சக நடிகர்களில் ஒருவருக்காக. நல்ல மனிதர்கள் கைவிடாமல் காட்டுவோம். ஒவ்வொரு சிறிய விஷயமும் முக்கியமானது. #helpdeepeshsfamily நிதியின் இணைப்பு பயோவில் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.