Actress hanged : காதல் கைகூடாததால் நடிகை தூக்கிட்டு தற்கொலை

சென்னை: Actress hanged herself because love didn’t work out : சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் பிரபல நடிகை தற் கொலை செய்து கொண்டார் . இந்த நிலையில் கடந்த 17 – ஆம் தேதி காலை 9 மணியளவில் நடிகை பவுலின் தனது நண்பர் அண்ணாதுரை என்பவரிடம் வேலை பார்க்கும் சிராஜு தீன் என்பவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டுள்ளார் . இவர் வண்ணாரப்பேட்டையில் வசிக்கிறார் . இவரிடம் நேற்று தொலைபேசியில் அழைப்பு விடுத்த நடிகை தீபா தனக்கு வாழப்பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இது பற்றிய தகவலை அண்ணாதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து போலீசார்அங்கு வந்த பார்த்தப்போது, கதவு பூட்டி இருந்துள்ளது. கதவை உடைத்துப் பார்த்தப்போது நடிகை பவுலின் புடவையில் தூக்கிட்டு தற்கொல செய்து கொண்டது தெரியவந்த‌து.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறியது: சென்னை கோயம் பேடு , நெற்குன்றம் அண் ணாமலை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸிகா (29) (Actress Deepa alias Pauline Jessica). இவர் திரைத் துறையைச் சேர்ந்த ஒருவரை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் நடிகை தீபாவின் காதலை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் வருந்திய நிலையில் இருந்த நடிகை தீபா தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை . சில காலம் மன உளைச்சலில் தான் இருந்ததாகவும், இதனால் தனக்கு வாழப்பிடிக்க வில்லை என்றும், ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அந்தக் காதல் ஆனால் கைகூடவில்லை. எனது காதலை, நான் காதலித்தவர் அங்கீகரிக்க மறுத்துவிட்டார் என அதில் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நடிகை தீபா, சென்னை கோயம் பேடு , நெற்குன்றம் அண் ணாமலை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இயக்குநர் மஹிவர்மன் இயக்கத்தில் நாசர் உள்ளிட்டோர் நடித்த வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் (She acted as the female lead in the movie Waita starring Nasser and others). நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்த துப்பறிவாளன் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். நடிகை தற்கொலை குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.