Rajinikanth’s daughter Soundarya : நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை

இறைவனின் அருளாலும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தாலும் குழந்தை பிறந்ததுள்ளது. வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

சென்னை: Actor Rajinikanth’s daughter Soundarya and Vishagan have a baby boy : சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் விசாகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இறைவன் அருளாலும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தாலும் தனக்கு குழந்தை பிறந்ததுள்ளது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜனிகாந்த்-லதா தம்பதியரின் (Actor Rajinikanth-Latha couple) இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரை கலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குந‌ர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரை கலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் வணங்காமுடி (Vishagan Vanangamudi)என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முன்னதாக சௌந்தர்யா, அஸ்வின் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். அஸ்வினுடன் ஏற்பட்ட பிரச்னையால் அவரை சௌந்தர்யா விவாகரத்து செய்துவிட்டார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததாக அறிவித்துள்ளார் (She announced the birth of her second child). ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில், அவர் தனது கர்ப்பத்தின் சில புகைப்படங்களையும், புதிதாகப் பிறந்த குழந்தையை பார்ப்பதையும் பகிர்ந்துள்ளார். குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வைத்துள்ளதாக சௌந்தர்யா தெரிவித்துள்ளார். ஆனால், பிறந்த குழந்தையின் முகத்தை அவர் வெளியிடவில்லை. இறைவனின் அருளாலும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தாலும் குழந்தை பிறந்ததுள்ளது. வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வீர் ரஜின்காந்த் வணங்காமுடி ஆசிர்வதிக்கப்பட்டவர். எங்களின் அற்புதமான மருத்துவர்களுக்கு நன்றி என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.