இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குசந்தையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 452 புள்ளிகள் அல்லது 0.75 சதவீதம் உயர்ந்து 60,737 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 குறியீட்டு எண் 170 புள்ளிகள் அல்லது 0.94 சதவீதம் உயர்ந்து 18,161 ஆகவும் முடிவடைந்தது.

இன்றைய முடிவில்,வங்கி நிஃப்டி 0.3 சதவீதமும், நிஃப்டி ஆட்டோ 3.43 சதவீதமும், நிஃப்டி ஐடி 1.19 சதவீதமும், நிஃப்டி மெட்டல் 1.5 சதவீதமும் உயர்ந்தன.

மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (HUL), நெஸ்லே இந்தியா, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ ஆகியவை குறைந்து காணப்பட்டன.எம் & எம், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐடிசி, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி ஆகியவை உயர்ந்து காணப்பட்டன.

இதையும் படிங்க : நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம் !