நேபாளத்தில் நடந்த கோர விபத்து !

நேபாளத்தின் முகு மாவட்டத்தில் கமகாதிக்குச் சென்ற ஒரு பயணிகள் பேருந்து சாலையிலிருந்து விலகி 300 மீட்டர் ஆற்றில் விழுந்தது.இந்த சம்பவத்தில் 32 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிக்காக நேபாள ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அனுப்பியது.தலையில் பலத்த காயமடைந்த 10 பேரை கோஹல்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றதாகவும், 5 பேரை அருகில் உள்ள ஒரு நர்சிங் ஹோமிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் பஸ்சில் இருந்த பல பயணிகள் விஜயதசமி பண்டிகையை கொண்டாட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் என்று செய்தி தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !