நகைக் கடன் வட்டி தள்ளுபடி

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நகைக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அதிரடியாக அறிவித்துள்ளது.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, தங்க நகை மற்றும் சவரன் தங்கப் பத்திரம் ஆகிய இரண்டிற்கும் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டியை குறைத்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. இரண்டு கடன்களுக்கும் வட்டி விகிதம் 1.45% குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இனி நகைக் கடன்களுக்கு 7.30% வட்டி விதிக்கப்படும். சவரன் தங்கப் பத்திரத்தை வைத்து பெறும் கடனுக்கு 7.20% வட்டி விதிக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.

இதேபோல, பண்டிகைக்காலத்தை முன்னிட்டு வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன்களுக்கும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. தற்போது இந்த வங்கியில் வீட்டுக் கடன் வட்டி 6.60% முதலும், கார் கடன் வட்டி 7.15% முதலும், தனிநபர் கடன் வட்டி 8.95% முதலும் தொடங்குகிறது.