Mettur dam water level : மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

KRS and Kabini dam : கே.ஆர்.எஸ் அணையிலிருந்து சுமார் 52 ஆயிரம் கன அடியும், கபினியிலிருந்து சுமார் 38 ஆயிரம் கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Image Credit : Twitter. கோப்புப்படம்.

சேலம்: Mettur dam water level is rising: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக கன‌மழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ் , கபினி அணைகள் நிரம்பி வருகின்றனர். இதனால் அந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணைகளிலிருந்து வெளியேற்றும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

இதனால் ஜூலை 8-ஆம் தேதி முதல் கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து சுமார் 52 ஆயிரம் கன அடியும், கபினியிலிருந்து சுமார் 38 ஆயிரம் கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கு (Mettur dam) புதன்கிழமை காலை நிலவரப்படி நீர் வரத்து 90 ஆயிரம் கன அடியாக உள்ளது .

காவிரியில் அதிக அளவில் நீர் வரத்து வருவதால் ஒகனேக்கல்லில் கடந்த 4 நாள்களாக பரிசலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற ஒகனேகல்லில் சுற்றுலா பயணிகளுக்கும், மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டை மாநிலங்களிலிருந்து ஒகனேகல்லுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

காவிரியில் அதிக அளவில் நீர் வரத்து உள்ளதால், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கே.ஆர்.எஸ், கபினி அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு (Mettur dam) வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர் மட்டம் புதன்கிழமை காலை 106.82 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஓடும் பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 நாளில் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 7 அடியாக உயர்ந்துள்ளதும் விவசாயிகள் மகிழ்ச்சிக்கு (Farmers are happy) மற்றொரு காரணமாகும்.