நேபாளம்: நேபாளம் நாட்டில் பொக்கரா விமான நிலையத்தில் (Nepal Plane Crash Identified) எட்டி நிறுவனத்தின் விமானம் தரையிறங்க சமயத்தில் தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணம் செய்த 72 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் இந்தியாவை சேர்ந்த குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஷ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வந்தது. அதே நேரம் சஞ்சய் ஜெய்ஸ்வால் உடலும் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டது. மேலும் இந்தியர்களின் 4 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர்களின் 4 உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அனைவரும் இந்தியா திரும்பினர்.