அமெரிக்க அதிபர் ஓய்வெடுத்த கடற்கரை பங்களா மீது அத்துமீறி விமானம் பறந்ததால் பரபரப்பு

joe-biden
அமெரிக்க அதிபர் ஓய்வெடுத்த கடற்கரை பங்களா மீது அத்துமீறி விமானம் பறந்ததால் பரபரப்பு

Joe Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வார இறுதிநாளான சனிக்கிழமை மத்திய அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டியுள்ள டேலேவேர் பகுதியில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் தனது மனைவியுடன் தங்கியிருந்தார்.

அதிபர் ஜோ பைடன் தங்கியிருந்ததால் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இத்தகைய பாதுகாப்புகளையும் மீறி, ஜோ பைடன் தங்கியிருந்த பங்காளா மீது விமானம் ஒன்று அத்துமீறி பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, உடனடியாக ரேஹோபோத் கடற்கரையில் உள்ள பாதுகாப்பான இல்லத்திற்கு ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி அழைத்து செல்லப்பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, ” இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிபரின் பாதுகாப்புக்கோ அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்புக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.

மேலும், விமானத்தை ஓட்டிய விமானியிடம் அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்பு சேவை விசாரணையை தொடங்கியுள்ளது. அதிபரின் பாதுகாப்புக்கோ அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்புக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: TN Rain: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு