வருகிறது ஊசியில்லா தடுப்பு மருந்து

3 டோஸ்களைக் கொண்ட அகமதாபாத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி கரோனா தடுப்பு மருந்தை அவசரப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு இந்த வாரத்தில் அனுமதியளிக்கும் எனத் தெரிகிறது.

இதுவரை இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

ஜைடஸ் கெடிலாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 6-வது தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.