பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி !

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ் மக்களை தன் தமிழ் பேச்சு மூலம் ஈர்த்தவர்.மேலும் இவரது பேச்சுக்கள் எல்லாம் மிக யதார்த்த வாழக்கையை குறிக்கும்.

சாலமன் பாப்பையா தலைமையில், இவரும் ராஜாவும் சேர்ந்து விவாதிக்க தொடங்கினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.இவர் முன்னணி தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

தற்போது இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இவர் விரைவில் குணமடைய அவரது ரசிகர்களும், நண்பர்களும் பிராத்தனை செய்து வருகின்றனர்.