யூடியூபர் பப்ஜி மதன் தர்மபுரியில் கைது !

யூ டியூபில் .தடை செய்யப்பட்ட பப்ஜி வீடியோ கேமை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து வந்தான் இந்த மதன்.மேலும் வீடியோவில் படு ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தான்

சிறுவர், சிறுமிகளை மிக ஆபாசமாக திட்டி வீடியோ கேம் விளையாடுவது இவன் வழக்கம்.இவர் மீது 150க்கும் மேற்பட்ட பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதுகுறித்து விசாரிக்க சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் பப்ஜி மதன் விசாரனைக்கு வரவில்லை

இதனிடையே அவரை கைது செய்து விசாரிக்கவும், அவரது TOXIC MADAN 18+ என்ற சேனலை தடை செய்யவும் யூடியூப் நிறுவனத்துக்கு போலீசார் கடிதம் அனுப்பினர்.

இந்தநிலையில் மதன் தலைமறைவு ஆகிவிட்டான்.சில தினங்களுக்கு முன் மதனின் மனைவி கைது செய்யப்பட்டார். தற்போது காவல்துறையினரால் ஒரு வாரத்திற்கு மேல் தேடப்பட்ட மதனை தர்மபுரியில் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.