கூல்டிரிங்ஸ் குடித்த இளைஞர் மூச்சுத்திணறி மரணம்

கூல்டிரிங்ஸ் குடித்த இளைஞர் மூச்சுத்திணறி மரணம்
கூல்டிரிங்ஸ் குடித்த இளைஞர் மூச்சுத்திணறி மரணம்

Young man death: சென்னையை அடுத்த அக்கரை பகுதியில் சிப்ஸ், டயட்கோக் குடித்த இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். 25 வயது இளைஞரான இவர் இறகுப்பந்தில் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் தனது நண்பர்கள் உடன் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அக்கரையில் இறகுப் பந்து விளையாடி உள்ளார். அதில், நன்றாக சோர்வுற்ற பிறகு தனது நண்பர்களுடன் இணைந்து சிப்ஸ், டயட் கோக் உள்ளிட்டவற்றை உட்கொண்டுள்ளார்.

அப்போது, அவருக்கு லேசான மூச்சுத் திணறல் ஏற்படவே அவரை பனையூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக எச்சரிக்கவே அவரை மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Young man suffocates to death after drinking Cooldrinks

இதையும் படிங்க: Baba Vikram: இயக்குனர் பாபா விக்ரம் காலமானார்