மஞ்சள் பூஞ்சை நோய் பற்றி தெரியுமா?

ஒரு பக்கம் கொரோனா பெரும் சவாலாக இருக்க கறுப்பு, வெள்ளையை தொடர்ந்து இப்போது மஞ்சள் நிற பூஞ்சை நோய் தாக்குதல் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட்டிங் ஆனது.

பீஹாரில் இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வெள்ளை பூஞ்சை நோய் கண்டறியபட்டன. இப்போது இதையும் விட ஆபத்தான மஞ்சள் நிற பூஞ்சை நோய், உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா உடன் இப்படி கலர் கலரா பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சை நோய் தாக்குதல் இந்திய மக்கள் இடையே ஒரு அச்சத்தை உண்டாக்கி உள்ளது. இன்று மஞ்சள் பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது என்ற செய்தி டுவிட்டரில் வேகமாக பரவியதால் இந்த விஷயம் #YellowFungus என்ற பெயரில் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.