நாளுக்கு நாள் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இருப்பினும், கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. கடந்த, 21-ம் தேதி உச்சபட்சமாக ஒருநாள் பாதிப்பு 36184 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 404 பேர் உயிரிழந்துள்ளனர்.